Home » Big breaking: அமெரிக்காவில் அதிரையர்கள் அதிகம் பயணிக்கும் ரயிலில் மர்மநபர் துப்பாக்கி சூடு!

Big breaking: அமெரிக்காவில் அதிரையர்கள் அதிகம் பயணிக்கும் ரயிலில் மர்மநபர் துப்பாக்கி சூடு!

by
0 comment

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புரூக்ளின் 36வது தெரு ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவர், புகை குண்டுகளை வீசி துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதில் 17 பேர் காயமடைந்திருக்கும் சூழலில், அதிரையர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அதிரை எக்ஸ்பிரஸ் நியூயார்க் செய்தியாளர் தெரிவித்துள்ளார். அஸ்தோரியாவிலிருந்து அதிகளவில் அதிரையர்கள், இந்த வழித்தட ரயிலில் பயணிப்பது வழக்கம். இந்நிலையில், நடந்த துப்பாக்கிச்சூட்டில் அதிரையர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter