239
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புரூக்ளின் 36வது தெரு ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவர், புகை குண்டுகளை வீசி துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதில் 17 பேர் காயமடைந்திருக்கும் சூழலில், அதிரையர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அதிரை எக்ஸ்பிரஸ் நியூயார்க் செய்தியாளர் தெரிவித்துள்ளார். அஸ்தோரியாவிலிருந்து அதிகளவில் அதிரையர்கள், இந்த வழித்தட ரயிலில் பயணிப்பது வழக்கம். இந்நிலையில், நடந்த துப்பாக்கிச்சூட்டில் அதிரையர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.