22
அதிரை பேருந்து நிலையத்தில் உள்ள 24 கடைகளுக்கான ஏலம் விடுவதற்கான அறிவிப்பை நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 25ம் தேதிக்குள் தாங்கள் ஏலம் எடுக்க விரும்பும் கடைக்காக டேவணித்தொகையாக ஒரு கடைக்கு ரூ.2,00,000/- (இரண்டு லட்சம் ரூபாய் மட்டும்) ஆணையர், அதிராம்பட்டினம் நகராட்சி என்ற பெயரில் வரைவோலையாக எடுத்து வரும் 25ம் தேதி மாலை 5 மணிக்குள் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளரிடம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு 26.04.2022 அன்று காலை 11 மணிக்கு அதிரை நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் ஏலத்தில் கடைகள் ஏலம் விடப்படும்.