அதிராம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு வருவாய் வட்டம் உருவாக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
முன்னதாக சட்டப்பேரவையில் பேசிய பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் கா அண்ணாத்துரை மதுக்கூரை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுக்கா உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் அதிராம்பட்டினத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்க மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளின் மனுக்களை பெற்று முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி செயல்படுத்த உள்ளதாக பேரவையில் தெரிவித்தார்.