Friday, April 19, 2024

அநியாய வரியை ரத்து செய்! அதிராம்பட்டினம் தாலுகாவை உருவாக்கிடு!! அதிகாரிகளுக்கு பறந்த மனுக்கள்!

Share post:

Date:

- Advertisement -

அதிரை நகராட்சியில் பல இடங்களில் சாலை, கழிவுநீர் வடிகால் வசதிகள் இல்லை. இத்தகைய சூழலில் 50% முதல் 150% வரி உயர்வுக்கு தலைவர் MMS. தாஹிரா அம்மாள் அப்துல் கரீம் தலைமையிலான நகராட்சி மன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனை திமுக கவுன்சிலர் ஆய்ஷா சித்திக்கா S.H.அஸ்லம், முஸ்லீம் லீக் கவுன்சிலர் பௌஜில் முபீன், SDPI கவுன்சிலர் பெனாசிரா அஜாருதீன் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்தனர்.

இந்நிலையில், நகராட்சி ஆணையர் சசிகுமாரை நேரில் சந்தித்த அதிரை நகர தலைவர் அஸ்லம் தலைமையிலான நிர்வாகிகள், அதிரை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதிய சாலை, கழிவுநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததை சுட்டிக் காட்டினர். மேலும் வரி விதிப்புக்கான A,B,C மண்டலங்களை மறுபரிசீலனை செய்வதுடன் வரி உயர்வை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனையடுத்து பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அதிரை நகர  SDPI நிர்வாகிகள், அதிராம்பட்டினத்தை தாலுகாவாக அறிவிக்க தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு வலியுறுத்தி மனு அளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...