அதிராம்பட்டினம் பைத்துல்மால் அயலக கிளைகளின் சார்பில் ரமலான் காலங்களில் இஃப்தார் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்று (23-04-2022) தனியார் உணவகம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் அதிரையர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ABM கிளைத் தலைவர் ஜெய்னுல் ஹுசைன் பேசினார் அப்போது அதிரை பைத்துல்மால் கிளை செய்து வரும் நலப்பணிகளை பட்டியலிட்டார்.
குறிப்பாக ஏழைகளுக்கு வழங்கி வரும், மாதாந்திர பென்ஷன் திட்டத்தை விரிவு படுத்த குவைத் வாழ் அதிரையர்கள் தங்களால்.ஆன பொருளாதார உதவிகளை செய்ய வேண்டுமாய் கேட்டு கொண்டார்.

முன்னதாக விருந்தினர்களை ஜமாலுதீன் வரவேற்றார்.
குறிப்பாக அதிரை பைத்துல்மால் சேவைகளுக்கு ஒத்துப்பு நல்க உள்ளதாக குவைத் வாழ் அதிரையர்கள் தெரிவித்ததாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.