Thursday, April 18, 2024

Big Breaking: அதிராம்பட்டினம் தாலுகா உருவாக்குவதற்கான பணிகள் துவக்கம்! கிராம மக்களிடம் கருத்து கேட்கும் அதிகாரிகள்!!

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்திலேயே மிக பெரிய தாலுகாவாக இருக்கும் பட்டுக்கோட்டையை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. குறிப்பாக அதிராம்பட்டினம், தம்பிக்கோட்டை, ஆண்டிக்காடு ஆகிய சரகங்களை கொண்டு அதிராம்பட்டினம் தாலுகா உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தங்கள் கிராமத்தை அதிராம்பட்டினம் தாலுகாவில் சேர்ப்பதற்கு அட்சேபனை இருக்கும் பட்சத்தில் அதனை பட்டுக்கோட்டை வட்டாட்சியர், கோட்டாட்சியர் அல்லது தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் வாயிலாக மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கேட்புக்கு பிறகு இறுதி முடிவுக்காக தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும். கடலோர மக்களின் கனவான அதிராம்பட்டினம் தாலுகா உருவாகும் பட்சத்தில் கடலோர பகுதிகளுக்கு அரசின் திட்டங்கள் விரைவாக கிடைப்பதுடன் பேரிடர் கால மீட்பு பணிகள் தொய்வின்றி மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...