Friday, April 19, 2024

பிலால் நகரில் அடிக்கடி ஏற்படும் மின் தடையை சரி செய்ய வேண்டும் – ஜாஸ்மின் கமால் கோரிக்கை !

Share post:

Date:

- Advertisement -

ஏரிப்புரக்கரை கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியான பிலால் நகரில் கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது.

இதற்கு அப்பகுதியில் இணைப்புகளுக்கு ஏற்ற மின் மாற்றிகள் இல்லாததை சுட்டிகாட்டி 1வது வார்டு கவுன்சிலர் ஜாஸ்மின் கமால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்ததனர்.

அதனடிப்படையில் ஊராட்சி சார்பில் மின் வாரியத்திற்கு மனு அளித்தனர் அம்மனு மீதான நவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என 1 வது வார்டு உறுப்பினர் ஜாஸ்மின் கமாலுதீன் அதிராம்பட்டினம் மின் வாரிய பொறியாளர் சர்மா அவர்களிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்,அதில் பிலால் நகர் மக்களின் கோரிக்கையான போதிய திறன் கொண்ட மின் மாற்றியை உடனே அமைக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.

இதனை பெற்று கொண்ட மின்வாரிய பொறியாளர் சர்மா இது குறித்து உரிய நடவடிக்கைகளை விரைவில் எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...