திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் புதிதாகப் பள்ளிவாசல் கட்டியுள்ளனர். இந்நிலையில் குடியிருப்புக்கு அனுமதி பெற்றுவிட்டுப் பள்ளிவாசல் கட்டியுள்ளதாகக் கூறி ஏற்கெனவே வழங்கிய அனுமதியைப் பேரூராட்சி செயல் அலுவலர் ரத்து செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கில் விதிமீறிக் கட்டப்பட்ட பள்ளிவாசலை இடிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறுத்திவைக்குமாறு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் மேல்முறையீடு செய்தனர்.
இந்த முறையீட்டை விசாரித்த நீதிபதி, விசாரணையை 15ஆம் தேதிக்குத் தள்ளிவைத்ததுடன், முதலில் விதிமீறிக் கட்டப்பட்ட பள்ளிவாசலுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். அதன்படி பேரூராட்சி செயல் அலுவலர் முன்னிலையில் அலுவலர்கள் பள்ளிவாசலின் கதவுகளைப் பூட்டி சீல் வைத்தனர். இதையொட்டி அப்பகுதியில் பாதுகாப்புக்காகக் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
முத்துப்பேட்டையில் விதிமீறிக் கட்டப்பட்ட பள்ளிவாசலுக்குப் பேரூராட்சி அதிகாரிகள் சீல்வைத்தனர்.
More like this

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில்...
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு,...

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...





