அதிராம்பட்டினம் MMS குடும்பத்தை சார்ந்தவர் ஜஃபர் இவர் ஏர் இந்தியா நிறுவனத்தின் திருச்சி விமான நிலையத்தின் மேலாளராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் ஏர் இந்தியாவின் AI ஏர்போர்ட் சர்வீசின் தலைமையின் சார்பில் ஆண்டு தோறும் சிறந்த நிர்வாகம்,கையாளுதல் ஆகியவற்றிற்கான கேடயம் சான்றிதழ்களை வழங்கி கெளரவிக்கும்.
அதன்படி இவ்வாண்டு திருச்சி விமான நிலையமும், இந்தூர் விமான நிலையமும் சிறந்த நிர்வாகம்,ஆளுமை,கையாளுதல் ஆகியவற்றில் சிறந்து விளங்கி உள்ளதாக டெல்லியில் நடைபெற்ற சீர்படுத்துதல்.மற்றும் வாடிக்கையாளர் சேவை மாநாட்டின் போது கேடயம் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் ஏர் இந்தியாவின் வணிக மேலாளரும் அதிராம்பட்டினம் மேலத்தெரு MMS குடும்பத்தை சார்ந்தவருமான MMS ஜஃபர் சிறந்த ஆளுமைக்கான பாராட்டு சான்றதழ் மற்றும் கேடயம் பெற்றார்.
இதனை AIஏர்போர்ட் சர்வீசஸ் மற்றும் வாடிக்கையாளர்கள் சேவை பிரிவின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.