Thursday, March 28, 2024

அதிரை வழியாக செல்லும் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான முன்பதிவு தொடக்கம்!

Share post:

Date:

- Advertisement -
[quads id=RndAds]

அதிராம்பட்டினம் வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

திருவாரூர் – காரைக்குடி அகல ரயில் பாதையில் அதிராம்பட்டினம் வழியாக எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற ஜூன் 4ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட நிலையில், எர்ணாகுளம் – வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான முன்பதிவு இன்று(25/05/2022) முதல் தொடங்கி உள்ளது.

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ்(வண்டி எண் – 06035) :

அனைத்து சனிக்கிழமைகளிலும் எர்ணாகுளத்தில் பிற்பகல் 12.35 மணிக்கு புறப்பட்டு,

அதிராம்பட்டினத்திற்கு நள்ளிரவு 2.39 மணிக்கு வந்து 2.40 மணிக்கு கிளம்பி

அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் வேளாங்கண்ணிக்கு அதிகாலை 5.50 மணிக்கு சென்று சேரும்.

வேளாங்கண்ணி – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ்(வண்டி எண் – 06036) :

அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு,

அதிராம்பட்டினத்திற்கு இரவு 9.38 மணிக்கு வந்து, 9.40 மணிக்கு கிளம்பி,

அனைத்து திங்கட்கிழமைகளிலும் எர்ணாகுளத்திற்கு பகல் 12 மணிக்கு சென்று சேரும்.

திருவாரூர் – காரைக்குடி மார்க்கத்தில் இயக்கப்படும் இந்த முதல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். IRCTC இணையதளம் மற்றும் மொபைல் செயலிகளிலும் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...