Wednesday, February 19, 2025

SDPI கட்சியினர் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்!!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்துள்ள செங்கபடத்தான்காட்டை சேர்ந்த 25 வயது இளம் பெண்ணுக்கு மலேசியாவில் உணவகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி சீனு என்பவர் சுற்றுலா விசாவில் மலேசியாவுக்கு அனுப்பியுள்ளார். இவரை மலேசியாவில் உள்ள வசந்தா என்பவர் அவருக்கு தெரியாமல் சீன பெண் ஒருவரிடம் விலைக்கு விற்றுள்ளார். இதையடுத்து அந்த இளம் பெண் சீன பெண்ணால் பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு துண்புறுத்தப்பட்டுள்ளார்.

இதற்கு உடன்படாத லெட்சுமி, அக்கும்பலிடமிருந்து தப்பித்து எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு, தான் ஆபத்தில் சிக்கி இருப்பதை எடுத்துக்கூறி தனக்கு உதவும்படி கோரி இருக்கிறார்.

இந்நிலையில், மலேசியாவில் ஆபத்தில் சிக்கிய பானுப்பிரியாவை பத்திரமாக இந்தியா கொண்டு வரும் முயற்சியாக, எஸ்டிபிஐ கட்சி வழக்கறிஞர் அணி மாநில துணைச்செயலாளர்  வழக்கறிஞர் நிஜாமுதீன்,  நேஷனல் விமன் ஃப்ரண்ட் அமைப்பின் மாநில செயலாளர் வழக்கறிஞர் சபியா நிஜாமுதீன், எஸ்டிபிஐ தஞ்சை மாநகர தலைவர் இக்பால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அதிரை அப்துல் ரஹ்மான், அதிராம்பட்டினம் நகர தலைவர் அசாருதீன் லெட்சுமி தாயார் பங்கஜவல்லி, உறவினர் கோவிந்தசாமி மற்றும் லெட்சுமி குழந்தை ஹர்னிகா ஆகியோரை அழைத்துக்கொண்டு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரை நேற்று  சந்தித்து, மலேசியாவில் ஆபத்தில் சிக்கிய தமிழகப் பெண் பானுப்பிரியாவை பத்திரமாக இந்தியா கொண்டுவருவதற்கான
உதவியை அளிக்கக் கோரி மனு அளித்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் ஆரம்ப சுகாதாரம் நிலையம் இல்லை – விரைந்து நடவடிக்கை எடுக்க...

அதிராம்பட்டினம் நகராட்சி அந்தஸ்து பெற்ற ஓரளவுக்கு மக்கள் தொகை கொண்ட நகரமாகும், இந்த நகரத்தில் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவ மனையாகவும்,...

அர்டா வளாகத்தில் தொடங்கியது, மருத்துவ சேவை – சர்க்கரை நோய் சிறப்பு...

அதிராம்பட்டினம் ரூரல் டெவலப்மெண்ட் அசோஷியேஷன், புதுப்பள்ளிவாசல் அருகிலுள்ள அர்டா வளாகத்தில் பல்வேறு இலவச மருத்துவ சேவைகளை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாரமும்...

அதிரை: மலம் கசடு,கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை வேண்டாம் – போர்கொடி தூக்கிய...

அதிராம்பட்டினம் நகராட்ச்சிக்கு உட்பட்ட பகுதிகளான,கரையூர் தெரு காந்தி நகர,ஆறுமா கிட்டங்கி தெரு கடற்கரை தெரு தரகர் தெரு பகுதிகளை உள்ளடக்கிய ஏரியாவில் நகராட்சி...
spot_imgspot_imgspot_imgspot_img