அதிரை ஃப்ரெண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் AFFA நடத்தும் 20 ம் ஆண்டு தென்னிந்திய அளவிளான மாபெரும் மின்னொளி கால்பந்து தொடர் போட்டி நேற்று (11.07.2022) ஞாயிற்றுக்கிழமை மாலை அதிரை கிராணி மைதானத்தில் துவங்கியது.
தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் ஒரு நாளைக்கு 8 போட்டிகள் வீதம் என்ற அடிப்படையில், தமிழகம் மட்டுமல்லாது மற்ற மாநிலங்கள், ஊர்களில் இருந்து பல்வேறு தலைசிறந்த அணிகள் பங்கு பெற்று நாக் – அவுட் சுற்று முறையில் விளையாடி வருகின்றனர்.
அதிரை வரலாற்றில் தனக்கென தனி முத்திரையை கால்பந்து ரசிகர்களின் மூலம் பெற்று வரும் அதிரை AFFA அணி, தற்போது நடத்தி வரும் இந்த தென்னிந்திய அளவிளான மின்னொளி கால்பந்து தொடர் போட்டி அதிரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இளைய வீரர்களை உள்ளடக்கிய அதிரை AFFA அணியின் ஆதிக்கம் தற்போது உள்ளூர் மற்றும் வெளியூர்களில் அதிகரித்து அடுத்த சுற்றுக்குக்கு தகுதி பெற்றுக் கொண்டிருக்கும் இச்சூழலில் தனது சொந்த மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்கு அதிரை AFFA அணி – MFC மன்னார்குடி அணியை சந்திக்கிறது.