தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் தஞ்சாவூர் மாவட்ட அளவிலான 19 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின்(ஸ்டிட்ச் பால்) தேர்வு இன்று தஞ்சை ஒலிம்பிக் கிட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த அணித்தேர்வில் அதிரையை சேர்ந்த 19 வயதிற்குட்பட்ட பல்வேறு வீரர்கள் பங்கேற்றனர். அதுமட்டுமின்றி தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் அதிரை பீச் கிரிக்கெட் கிளப் ABCC அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் அஹமது ஜக்கரியா(S/O ஜுல்கிஃப்ளி அஹமது), சிட்னி ஃப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் SFCC அணியைச் சேர்ந்த அப்ரார்(S/O ஹுசைன்), ஆசாத்நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் ASC அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் சுஹைல் அஹமது(S/O அஜ்மீர் கான்) ஆகியோர் சிறப்பாக விளையாடி தஞ்சை மாவட்ட அணிக்கு தேர்வாகியுள்ளனர். விளையாட்டுக்கு பெயர் பெற்ற அதிரையில் இருந்து, தஞ்சை மாவட்ட கிரிக்கெட் கிளப்பிற்கு அதிரையர்கள் மூவர் தேர்வாகியுள்ளது சிறப்புக்குறியது.


