தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 22.08.2022 , 23 , 24 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தஞ்சை மாவட்டம் அதிரையில் இன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு குளிர் காற்றும் வீசத் தொடங்கி அடுத்த சில நிமிடங்களுக்குள் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. வெப்பசலனத்தில் வெதும்பிக் கொண்டிருந்த அதிரையர்களுக்கு இந்த வானிலை மாற்றம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.