அதிரை தவ்ஹீத் ஜமாஅத் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் சார்பில் நேற்று 11.09.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் மாமனிதர் முஹம்மது நபி (ஸல்) சிறப்பை விளக்கும் பொதுக்கூட்டம் அதிரை பேரூந்து நிலையத்தில் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்திற்கு தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் P.ஜைனுல் ஆபிதீன் மற்றும் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் மாநில பேச்சாளர் S.A.இம்ரான் கான் ஆகியோர் கலந்து கொண்டு நபிகளாரின் மாண்புகளையும் சிறப்புகளையும் சிறப்புரையாற்றினர்.
உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.