Friday, April 19, 2024

சிங்கப்பூர் : ஸ்கூட் விமான கருத்தரங்கில் அதிரை MMS ஜஃபர் பங்கேற்பு! (படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

தென்னிந்திய விமான பயண பாதுகாப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளின் தீவிரம் காட்டியமைக்கு பாராட்டு !

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்தில் மேலாளராக இருந்து வருபவர் நமதூர் MMS ஜஃபர்.

இவர் திருச்சி விமான நிலையத்தில் விமானங்கள் ஹேண்ட்லிங்,சுகாதாரம், பாதுக்காப்பு உள்ளிட்டவற்றை கூடுதலாக கவனித்து வருகிறார்.

இந்த நிலையில் ஸ்கூட் என்ற சிங்கப்பூரின் தனியார் விமான நிறுவனம் உலகளாவிய விமான நிலைய பாதுகாப்பு, ஹேண்ட்லிங் உள்ளிட்டவற்றை திறமையாக கையாளும் நபர்களை கவுரவிக்கும் வண்ணம் சிங்கப்பூரில் உள்ள தனியார் அரங்கில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதில் தென்னிந்திய அளவில் சிறப்பான ஆளுமை என்ற அடிப்படையில் நமதூரை சார்ந்த MMS ஜஃபர் அழைக்கப்பட்டார்.

அழைப்பின் பேரில் சிங்கப்பூர் சென்ற அவர் தமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை பயன்படுத்தி இளைஞர்கள் உத்வேகத்துடன் செயலாற்ற வேண்டும் எனவும் இன்னும் சில ஆண்டுகளில் விமான சேவை என்பது அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றாகும் சூழல் உருவாகி உள்ளதாக தெரிவித்தார்.

இத்தகைய பணிகளுக்கு இளைஞர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும் எனவும்,கவுரவமான பணிகளை நாடி நாம் எங்கும் செல்ல தேவையில்ல என்றும் அத்தகைய பணிகள் தாமாகவே நம்மை வந்தடையும் என்றார்.

முன்னதாக சிங்கப்பூர் வாழ் அதிரையர்களை சந்தித்த அவர் நமதூரின் அடிப்படை தேவைகளை நமது அதிராம்பட்டினம் நகராட்சி மூலமாக படிப்படியாக செய்து வருவதாகவும் இதற்கு பொதுமக்கள் வெகுவாக ஒத்துழைப்பு நல்கி வருவதாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...