Home » அதிரையில் ஆயிரக்கணக்கானோர் கைது! RSS அமைப்பை தடை செய்ய வலியுறுத்தல்!!

அதிரையில் ஆயிரக்கணக்கானோர் கைது! RSS அமைப்பை தடை செய்ய வலியுறுத்தல்!!

by அதிரை இடி
0 comment

தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை போன்ற அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்தும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து அதிரை அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அதிரையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தக்வா பள்ளிவாசல் அருகிலிருந்து துவங்கிய பேரணியில் ஏராளமானோர் பங்கேற்று பேருந்து நிலையம் நோக்கி சென்றனர். அப்போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்த ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக பொதுமக்கள் முழக்கமிட்டனர். இதனிடையே ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறை, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter