Friday, March 29, 2024

அதிரைக்கு கிடைக்கப் போகும் பவர்ஃபுல் மின்சாரம் – அடிக்கல் நாட்டுவிழா கோலாகலம் !

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் நிலவி வரும் மின் தட்டுப்பாட்டை போக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கையை அடுத்து அப்போதைய அதிமுக அரசு 110KV துணை மின் நிலையம் அமைக்க ஒப்புதல் வழங்கியது.

ஏட்டளவில் மட்டுமே இருந்த இந்த திட்டத்தை திமுக அரசு செயல்வடிவம் கொடுக்க தீவிரம் காட்டியது,இதனிடையே நகராட்சியாக தரமுயற்த்தப்பட்ட அதிரைக்கு போதுமான கட்டமைபு பணிகளை முடுக்கிவிட்டு பணிகள் நடந்து வருகிறது.

துணை மின் திட்டத்தை விரைவாக செயல்படுத்த நகர்மன்ற தலைவர் MMS தாஹிரா அம்மாள் அப்துல் கறிம் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் மின்சார துறை அமைச்சரை நேரில் சந்தித்து 110KV துணை மின் நிலையத்தை விரைந்து செயல்படுத்த போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டு கொண்டனர்.

இதனடிப்படையில் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் க. அண்ணாத்துரை இத்திட்டம் விரைந்து செய்ல்படும் என அமைச்சர் கூறியதை சுட்டி காட்டினார்.

இந்த நிலையில் 110KV துணை மின் நிலைய அடிக்கல் நாட்டும் பணி இன்று காலை அதிராம்பட்டினத்தில் நடைபெற்றது.

இதில் சிற்ப்பு விருந்தினராக க.அண்ணாத்துரைMLA கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.

முன்னதாக நகர தலைவர் தாஹிரா அம்மாள், அப்துல் கறிம் அனைவரையும் வரவேற்றனர்.

இந்த நிகழ்வில் நகராட்சி துணைத் தலைவர் இராம குணசேகரன் ,மாநில கலை இலக்கிய பண்பாட்டு பேரவை அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம் மாவட்ட பொருளாளர் அஸ்லம், வார்டு உறுப்பினர்கள், மின்வாரிய அதிகாரிகள்,ஊழியர்கள்,பொதுமக்கள் வெகுவாக கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...