Friday, April 19, 2024

தொடங்கியது பருவமழை! பிலால் நகரில் வடிகால் தூர்வாரும் பணிகள் தீவிரம்!

Share post:

Date:

- Advertisement -

அதிரையை அடுத்த ஏரிப்புறக்கரை ஊராட்சி 1வது வார்டு கவுன்சிலர் ஜாஸ்மின் பானு கமாலுதீனின் தீவிர முயற்சியால் பிலால் நகர் ரயில்வே கேட் முதல் காலேஜ் முக்கம் வரையிலான வடிகால் வாய்க்காலை தூர்வாரும் பணிகள் நேற்று 02.11.2022 அன்று தமிழக அரசின் உள்ளாட்சி துறையால் துவங்கியதுடன் புதிய பாலத்திற்கான கோரிக்கையும் ஏற்கப்பட்டது.

வருடந்தோறும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பிலால் நகரின் துயரங்கள் குறித்து பல்வேறு உயர் அதிகாரிகள், முதலமைச்சரின் தனிப்பிரிவு போன்றவற்றிற்கு தொடர் கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டதை தொடர்ந்து இன்று உள்ளாட்சி துறையின் ஐ.ஏ.எஸ் ரேங்க் உயர் அதிகாரிகள், ஒன்றிய பெருந்தலைவர் பழனிவேலு, ஒன்றிய குழு உறுப்பினர் சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர் சக்தி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரடியாக பிலால் நகரில் கள ஆய்வு செய்ததுடன் JCB இயந்திரம் மூலம் வாய்க்காலை தூர்வாரும் பணிகளை துவக்கி வைத்தனர்.

தூர்வாரும் பணிகள் நாளையும் தொடர்ந்து நடைபெறவுள்ளதுடன் செடியன்குளம் வாய்க்கால் ஆக்கிரமிப்பு பிரச்சனைகள் தொடர்பாகவும் தொடர் முயற்சிகளை கவுன்சிலர் மேற்கொண்டு வருகிறார்.

மேலும் கவுன்சிலர் ஜாஸ்மின் பானு கமாலுதீனின் கோரிக்கையை ஏற்று பிலால் நகருக்கு உயர்மட்ட பாலம் அமைத்துத் தருவதற்கான அளவீடுகளையும் உள்ளாட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...