வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று அதிகாலை நாகப்பட்டினம் கடற்பகுதியில் கரையை கடந்தது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பரவலாக கடந்த இரு நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது.
இதனிடையே இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் தஞ்சை மாவட்டத்தில் பதிவான மழை அளவு :
அணைக்கரை – 103.20 மிமீ
பூதலூர் – 93.40 மிமீ
மஞ்சளாறு – 90.20 மிமீ
அய்யம்பேட்டை – 83.00 மிமீ
தஞ்சாவூர் – 81.20 மிமீ
திருக்காட்டுப்பள்ளி – 72.60 மிமீ
திருவிடைமருதூர் – 62.60 மிமீ
குருங்குளம் – 60.60 மிமீ
அதிராம்பட்டினம் – 53.60 மிமீ
வல்லம் – 52.00 மிமீ
பெரிய அணைக்கட்டு – 50.80
திருவையாறு – 47.00 மிமீ
கும்பகோணம் – 44.40 மிமீ
மதுக்கூர் – 42.60 மிமீ
பாபநாசம் – 38.00 மிமீ
நெய்வாசல் தென்பாதி – 32.60 மிமீ
வெட்டிக்காடு – 32.00 மிமீ
பட்டுக்கோட்டை – 30.00 மிமீ
ஈச்சன்விடுதி – 27.40 மிமீ
ஒரத்தநாடு – 26.40 மிமீ
பேராவூரணி – 17.20 மிமீ