அதிரையின் விரிவாக்க பகுதியாக கருதப்படும் ஏரிப்புறக்கரை ஊராட்சிக்குட்பட்ட சாணாவயல் மற்றும் சவுக்குகொல்லை பகுதியில் இதுநாள் வரை முறையான சாலை மற்றும் கழிவுநீர் வடிகால் வசதி மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்து மேலத்தெருவை சார்ந்த என்.ஏ.முகம்மது யூசுப் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரையின் பரிந்துரையுடன் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தார். இதனையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சம்மந்தப்பட்ட அலுவலர் உறுதி அளித்திருப்பதாக யூசுப் கூறினார். இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரை செய்ய உறுதுணையாக இருந்த தஞ்சை திமுக தெற்கு மாவட்ட பொருளாளரும் முன்னாள் சேர்மனுமான எஸ்.எச்.அஸ்லம் மற்றும் ஏரிபுரக்கரை கவுன்சிலர் சுரேஷ் ஆகியோருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.