Home » அதிரையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்!

அதிரையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்!

by அதிரை இடி
0 comment

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தொழிற்சங்கமான AITUC சங்கத்தில் அதிரை நகராட்சி தூய்மை பணியாளர்கள் 85 பேர் தங்களை இணைத்துக் கொண்டனர். கம்யூனிஸ்ட் நகர செயலாளர் கோட்டூரார் க.ஹாஜாமைதீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் பொ க. புபேஸ் குப்தா, விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயளாலர் சி.பக்கிரிசாமி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் அ.கலியபெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது நீண்டகால ஒப்பந்த பணியாளர்கள் அனைவரையும் நிரந்தர பணியாளராக நியமிக்க வேண்டும், குடிமனை இல்லாதவர்கள் அனைவருக்கும் குடிமனை வழங்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டன. இறுதியாக நகராட்சி தூய்மை பணியாளர் பாலா நன்றி கூறினார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter