Wednesday, April 24, 2024

கட்சிக்கு உழைப்பவர்களின் பெயரை அழைப்பிதழில் அச்சடித்த சேதுபாவாச்சத்திரம் திமுக! அதிரையில் தொடரும் வெறுப்பு!!

Share post:

Date:

- Advertisement -

அதிரையை சார்ந்த முன்னாள் பேரூர் மன்ற சேர்மன் எஸ்.எச்.அஸ்லம், தற்போது தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளராகவும் மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் உள்ளார். இந்நிலையில் இன்று நடைபெற கூடிய அதிரை நகர திமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்கான அழைப்பிதழில் அவரது பெயர் இடம்பெறாதது பெரும் சர்ச்சையானது. கட்சியின் உயர் பொறுப்பில் உள்ள அதிரை மண்ணின் மைந்தனின் பெயரை உள்ளூர் அழைப்பிதழில் குறிப்பிடாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய உடன்பிறப்புகள், வெறுப்பு அரசியலை கைவிட்டுவிட்டு அனைவரையும் அரவணைத்து செல்வது தான் நகர செயலாளர் பதவிக்கு அழகு எனவும் விமர்சித்தனர்.

இந்நிலையில் தங்கள் பகுதியில் கட்சிக்கு உழைத்தவர்களின் பெயர்களை மறைக்காமல் செயல்வீரர்களுக்கான அழைப்பிதழில் அச்சிட்டு அனைவரையும் அரவணைத்து செல்கிறார் சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துமாணிக்கம். அதன்படி மாவட்ட அவைத்தலைவர், முன்னாள் மாவட்ட நிர்வாகிகள், இந்நாள் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோரின் பெயர்கள் முன்னிலையில் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் எந்தவித சச்சரவுகளுமின்றி சேதுபாவாச்சத்திரம் வடக்கு ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...