திமுகவில் சோழ மண்டல தளபதியாக கருதப்பட்ட தஞ்சாவூர் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கோ.சி.மணியின் 6ம் ஆண்டு நினைவு அஞ்சலி கூட்டம் இன்று பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் கா.அண்ணாதுரை எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆதிராஜேஷ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கோவை தம்பி, இளைஞரணி துணை அமைப்பாளர் மகேஷ், ஒன்றிய நகர செயலாளர்கள் பங்கேற்றனர். இதில் மாவட்ட பொருளாளர் S.H.அஸ்லம் சார்பில் அதிரை நகர திமுக இளைஞரணி முன்னாள் அமைப்பாளர் சாகுல் ஹமீது, புஷ்பராஜ், துணை அமைப்பாளர் கிருபா, அஸ்கர், நூவண்ணா ஆகியோர் பங்கேற்று புகழ் அஞ்சலி செலுத்தினர்.