DATE: 10-12-2002
ஹாஜா நகரை சேர்ந்த மர்ஹூம் முகம்மது சாலிஹ் அவர்களின் மகளும், மர்ஹூம் முகம்மது இஸ்மாயில் அவர்களின் மனைவியும், செய்யது அகமது அவர்களின் மாமியாரும், அப்துல் உசேன் அவர்களின் பெரியம்மாவும் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் தாயாருமான ஆலி வீட்டைச் சேர்ந்த கதீஜா அம்மாள் அவர்கள் இன்று சனி கிழமை பகல் ஹாஜா நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று இஷா தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இறைவா! (இந்த தாயை) மன்னிப்பாயாக! நல்வழி பெற்றவர்களிடையே அவரது தகுதியை உயர்த்துவாயாக! அவருக்குப் பிறகு எஞ்சியிருப்போருக்கு அவரைவிடச் சிறந்த துணையை வழங்குவாயாக! அகிலத்தின் அதிபதியே! எங்களுக்கும் அவருக்கும் மன்னிப்பு அருள்வாயாக! அவரது மண்ணறையை (கப்ரை) விசாலமாக்குவாயாக! அதில் அவருக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவாயாக!