Friday, April 19, 2024

அனைத்து தரப்பையும் அரவணைத்து செல்வோம்! தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பேச்சு!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அவைத்தலைவர் சேகர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் அண்ணாதுரை எம்.எல்.ஏ, சார்பு அணிகளுக்கான மாவட்ட, ஒன்றிய, நகர அமைப்பாளர்கள் நியமனத்தின்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பேசினார். அனைவரும் ஒன்றிணைந்து கட்சி பணியை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், முத்தமிழறிஞர் கலைஞரின் மூத்த பிள்ளையாம் முரசொலி நாளிதழின் சந்தா சேர்க்கையை அதிகப்படுத்த வலியுறுத்தினார். இதனிடையே செயற்குழு கூட்டத்தில் நகர, ஒன்றிய செயலாளர்கள் தெரிவித்த கருத்துக்களையும் மாவட்ட செயலாளர் அண்ணாதுரை கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் திமுக வர்த்தகர் அணி மாநில துணை தலைவர் பழஞ்சூர் செல்வம், மாவட்ட பொருளாளர் எஸ்.எச்.அஸ்லம், மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ்மா அவர்கள்..!!

இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் பேத்தியும், மர்ஹூம் முட்டை.கோழி அபூபக்கர்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...