தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அவைத்தலைவர் சேகர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் அண்ணாதுரை எம்.எல்.ஏ, சார்பு அணிகளுக்கான மாவட்ட, ஒன்றிய, நகர அமைப்பாளர்கள் நியமனத்தின்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பேசினார். அனைவரும் ஒன்றிணைந்து கட்சி பணியை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், முத்தமிழறிஞர் கலைஞரின் மூத்த பிள்ளையாம் முரசொலி நாளிதழின் சந்தா சேர்க்கையை அதிகப்படுத்த வலியுறுத்தினார். இதனிடையே செயற்குழு கூட்டத்தில் நகர, ஒன்றிய செயலாளர்கள் தெரிவித்த கருத்துக்களையும் மாவட்ட செயலாளர் அண்ணாதுரை கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் திமுக வர்த்தகர் அணி மாநில துணை தலைவர் பழஞ்சூர் செல்வம், மாவட்ட பொருளாளர் எஸ்.எச்.அஸ்லம், மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.