மரண அறிவிப்பு:நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செ.ந. முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின் மகனும், மர்ஹூம். அப்துல் ரஹ்மான் அவர்களின் மருமகனும், மர்ஹூம் செ.ந. முஹம்மது அன்சாரி, மர்ஹூம் செ.ந. செய்யது இப்ராஹீம் ஆகியோரின் சகோதரரும், ஷாகுல் ஹமீது, அப்துல் ரவூஃப் ஆகியோரின் தகப்பனாரும், அஹமது சேகுனா அவர்களின் மாமனாருமாகிய ஹாஜி செ.ந. முஹம்மது அபூபக்கர் அவர்கள் இன்று வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் அஸர் தொழுதவுடன் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.