Saturday, April 20, 2024

அதிராம்பட்டினம்,பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டு வந்த செகந்திராபாத்-ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை ஜூன் வரை நீட்டிப்பு!

Share post:

Date:

- Advertisement -

செகந்திராபாத்தில் இருந்து சென்னை மார்க்கத்தில், திருவாரூர், திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி வழியாக ராமேஸ்வரம் வரை சிறப்பு ரயில் கடந்த சில மாதங்களாக இயக்கப்பட்டு வருகிறது. வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு வந்த இந்த சிறப்பு ரயிலுக்கு, பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வந்தது. அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி போன்ற பகுதிகளில் இருந்து சென்னையில் இருந்து வருவதற்கும், சென்னை செல்வதற்கும் நேரடி ரயிலாக இந்த செகந்திராபாத்-ராமேஸ்வரம் சிறப்பு ரயில் இருந்து வந்தது.

பாம்பன் ரயில் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், கடந்த இரு மாதங்களாக செகந்திராபாத்-ராமநாதபுரம் சிறப்பு ரயிலாக இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது செகந்திராபாத்-ராமநாதபுரம் இடையே மேலும் நான்கு மாதத்திற்கு சிறப்பு ரயில் சேவையை நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

செகந்திராபாத் – ராமநாதபுரம் சிறப்பு ரயில் (வண்டி எண் 07695)

ராமநாதபுரம் – செகந்திராபாத் சிறப்பு ரயில் (வண்டி எண் 07696)

அதன்படி வரும் ஜூன் மாதம் 30ம் தேதி வரை இந்த ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இயங்கிய அதே நேரம், கால அட்டவணைப்படியே இந்த ரயில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ரயிலுக்கான முன்பதிவும் ஆரம்பமாகிவிட்டது.

மேலும் திருவாரூர் – காரைக்குடி வழித்தடத்தில் இயக்குவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள தாம்பரம்-செங்கோட்டை வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் ரயில், எர்ணாகுளம்-வேளாங்கண்ணி வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில், காரைக்குடி-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றையும் விரைந்து இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கங்கள், ரயில்வே ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SC – RMD Time Table

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...