Friday, April 19, 2024

அதிரையில் மகா கும்பாபிஷேகம்! பக்தர்களுக்கு ரோஸ்மில்க் வழங்கிய திமுகவினர்!!

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் அருள்மிகு ஆதிபராசக்தி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று சிறப்பித்தனர். இந்நிலையில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொருளாளர் அலுவலகம் சார்பில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சமூக நல்லிணக்கத்தை பறைச்சாற்றும் விதமாக மாவட்ட செயலாளர் கா.அண்ணாதுரையின் அறிவுறுத்தலினின்படி கோவில் விழாவில் பங்கேற்றவர்களுக்கு ரோஸ்மில்க் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட பொருளாளரும் முன்னாள் அதிரை சேர்மனுமான எஸ்.எச்.அஸ்லம் செய்திருந்தார். இதனையடுத்து அஸ்கர், பொறியாளர் புஷ்பராஜ், நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் கிருபா, திருப்பதி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்ற 600க்கும் மேற்பட்டோருக்கு ரோஸ்மில்க் வழங்கினர். இதனிடையே ஆறுமுககிட்டங்கி தெரு கிராம பஞ்சாயத்து சார்பில் எஸ்.எச்.அஸ்லமிற்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...