Tuesday, March 19, 2024

Big breaking: அதிரை வார்டு குளறுபடி விவகாரம்! போராட்டக்காரர்கள் மீதான வழக்கு தள்ளுபடி!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை நகராட்சி வார்டு மறுவரையரை அவசர கதியில் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஆரம்பம் முதலே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் நூற்றாண்டு பழமைவாய்ந்த சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்குட்பட்ட 6 வார்டுகளுமே பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது சர்ச்சையானது. நகராட்சி தேர்தலில் பெண்கள் போட்டியிடுவது வரவேற்கத்தக்க ஒன்று என்றபோதும், மக்களின் கருத்துக்களை காது கொடுத்து கேட்காமல் அவசர கதியில் உள்ளூர் அரசியல் பிரமுகருக்கு ஆதரவாக வார்டுகள் மறுவரையரையை அதிகாரிகள் மேற்கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் எல்லைகளை தீர்மானித்தத்திலும் குளறுபடிகள் நடந்துள்ளன.

இதனை கண்டித்து ஜனநாயக ரீதியில் அதிரை நகராட்சி முன் கடந்த ஆண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் உட்பட 26பேர் மீது 4 சட்டங்களில் 7 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, 26 பேரையும் விடுதலை செய்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : கடற்கரை தெருவை சேர்ந்த அமீனா அவர்கள்..!!

கடற்கரை தெரு இடியப்பகார நிஷா வீட்டை சேர்ந்த மர்ஹும். அகமது அவர்களின்...

திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்.. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன ? முழு விபரம் இதோ!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தனது கூட்டணியை இறுதி...

மரண அறிவிப்பு : கடற்கரை தெருவை சேர்ந்த பி.முஹம்மது சுபுஹானுத்தீன் அவர்கள்..!!

மர்ஹும்.மு.மு. முகைதீன் சேக்காதி, மர்ஹும் முகைதீன் பக்கீர் இவர்களின் பேரனும், மர்ஹும்...