778
அதிரை வண்டிப்பேட்டை அடுத்த மதுக்கூர் சாலையில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆழ்துளை கிணற்றிலிருந்து நீர் எடுத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சேமித்து பின்னர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவது வழக்கம். இந்த சூழலில் சம்மந்தப்பட்ட அந்த ஆழ்துளை கிணற்றின் பைப் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக ஓடுகிறது. கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என பொதுமக்கள் அஞ்சும் சூழலில் இதனை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனத்தில் உடனடியாக குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் விணாகாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.