Thursday, April 25, 2024

வாசனை_கவியன்பன்கலாம்

Share post:

Date:

- Advertisement -

காற்றில் மிதந்து வந்து
நாசியில் நுழைந்து
மூளைக்குத் தரும் பரிசு

தேனீயின் சுறுசுறுப்பைத்
தேடிவந்து தென்றல் வழியாக
உணர்வுக்குத் தரும் உணவு

கனவுகளை உருவாக்கும்
கற்பனைச் சிறகுகளை விரிக்கும்
எண்ணங்களுக்குத் தரும் வித்து

சுற்றியுள்ளோர் உன்மீது
பற்றுக் கொள்ள வைக்க
தொற்றிக் கொள்ளும் தோழமை

உணர்ச்சிகளை மென்மையாக்கி
ஆன்மாக்களின் அரவணைப்பை
ஆரத்தழுவச் சொல்லும் ஈர்ப்பு

கைகளால் கசக்கினாலும்
கடைசி வரைக்கும் நறுமணம்
களையாதிருக்கும் தியாகம்

பூக்கள் ஈன்றெடுத்ததால்
பூமியை முத்தமிட்ட மழையால்
புல்லின் மீது பட்ட பனித்துளியால்

ஆக்கம்:

கவியன்பன் கலாம்

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...