காற்றில் மிதந்து வந்து
நாசியில் நுழைந்து
மூளைக்குத் தரும் பரிசு
தேனீயின் சுறுசுறுப்பைத்
தேடிவந்து தென்றல் வழியாக
உணர்வுக்குத் தரும் உணவு
கனவுகளை உருவாக்கும்
கற்பனைச் சிறகுகளை விரிக்கும்
எண்ணங்களுக்குத் தரும் வித்து
சுற்றியுள்ளோர் உன்மீது
பற்றுக் கொள்ள வைக்க
தொற்றிக் கொள்ளும் தோழமை
உணர்ச்சிகளை மென்மையாக்கி
ஆன்மாக்களின் அரவணைப்பை
ஆரத்தழுவச் சொல்லும் ஈர்ப்பு
கைகளால் கசக்கினாலும்
கடைசி வரைக்கும் நறுமணம்
களையாதிருக்கும் தியாகம்
பூக்கள் ஈன்றெடுத்ததால்
பூமியை முத்தமிட்ட மழையால்
புல்லின் மீது பட்ட பனித்துளியால்
ஆக்கம்:
கவியன்பன் கலாம்