கடல்பசு தினத்தை முன்னிட்டு பான் செக்கர்ஸ் பப்ளிக் & ஓம்கார் பவுண்டேசன் மற்றும் கிங்ஸ் ரோட்டரி சங்கம் இணைந்து நோபல் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் ரோலர் ஸ்கேட்டிங் உலக சாதனை நிகழ்வு இன்று 07.05.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு துவங்கியது.
இந்த ரோலர் ஸ்கேட்டிங் உலக சாதனை நிகழ்வை அதிரை நகர துணைத் தலைவர் இராம.குணசேகரன் துவக்கி வைத்தார்.
அதிரையிலிருந்து தொடர்ந்து 15 கிலோமீட்டர் மேலாக நடைபெற்ற இந்த உலக சாதனை ரோலர் ஸ்கேட்டிங் நிகழ்வில் 07 மாணவர்கள் கலந்து கொண்டனர்.