Home » #பசி

பசிதான் உணர்வைப் புரட்டும்__நீ

பயணப் படவே மிரட்டும்

வசிக்க விடாமல் விரட்டும்__உன்

வளங்கள் குவிய திரட்டும்

அறிவுப் பசியின் உணவு__நீ

அதிகம் படித்தால் நிறைவு

வறியோர்ப் பசியை உணரு__உன்

வசதிப் பெருகும் தினமும்

மிருகம் பசியால் துடிக்கும்_ அது

மிரளும் எதையும் கடிக்கும்

அருகில் இருந்தால் துரத்தும்__அது

அளவிலாப் பசியை உணர்த்தும்

ஆக்கம் *கவியன்பன் கலாம்*

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter