அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் வர இருக்கும் சூழலில் திமுகவை அமைப்பு ரீதியாக வலுவாக்கும் பணியில் அக்கட்சி தலைமை ஈடுபட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக இளைஞரணி, மாணவரணி, சிறுபான்மை அணி உள்ளிட்ட சார்பு அணிகளுக்கான நிர்வாகிகள் படிபடியாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக தஞ்சை தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு தலைவராக அதிரையை சார்ந்த ஜமாலுதீனை திமுக தலைமை நியமித்து அறிவித்துள்ளது. ஆளும் திமுகவில் ஏற்கனவே அதிரையை சார்ந்த முன்னாள் சேர்மன் எஸ்.எச்.அஸ்லம் மாவட்ட பொருளாளராக இருக்கும் சூழலில், அக்கட்சியின் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவராக மற்றொரு அதிரையரான ஜமாலுதீன் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.