அதிரையில் 12வது வார்டுக்கு உட்பட்ட நடுத்தெரு கீழ்புறம் 3வது சந்தில் தார்ச்சாலை சிதிலமடைந்து கிடப்பதால் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் சறுக்கியபடி விபத்திற்குள்ளாவது வாடிக்கையாய் வந்த நிலையில், இது குறித்து அதிரை எக்ஸ்பிரஸ் கடந்த மார்ச் மாதம் செய்தி வெளியிட்டது.
15 வருடத்திற்கும் மேலாக போடப்பட்ட தார்ச்சாலை பெயர்ந்து கற்கள் வெளியே தெரிந்தும், மழைக் காலங்களில் குண்டும் குழியுமாய் காட்சியளித்து, நம் பகுதிக்கு புதிய சாலை வந்திடாதா என ஏங்கி கொண்டிருந்த அப்பகுதி மக்களின் எண்ணவோட்டங்களை அறிந்து தற்போது புதிய சாலை அமைப்பதற்கான பணிகளில் 12வது வார்டு கவுன்சிலர் ராலியா முகமது சுகைப் பம்பரமாய் சுழன்று வருவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.