Home » அதிரை துலுக்கா பள்ளிவாசல் நிலத்தில் ₹50லட்சம் மதிப்பில் புதிய கடைகளுக்கு அடிக்கல்!

அதிரை துலுக்கா பள்ளிவாசல் நிலத்தில் ₹50லட்சம் மதிப்பில் புதிய கடைகளுக்கு அடிக்கல்!

by டோலோ டோலோ
0 comment

அதிராம்பட்டினம் துலுக்கா பள்ளிக்கு சொந்தமான வக்பு நிலங்களை சிலர் அக்கிரமிப்பு செய்து வைத்திருக்கிறார்கள்.

சிலர் சட்ட நடவடிக்கைக்கு பின்னர் நிலங்களை பள்ளியின் நிர்வாகம் கையகப்படுத்தி வருகிறார்கள். அதன்படி மீட்கப்பட்ட இடங்களில், கட்டுமானப்பணியை துவக்கி பள்ளியின் வருவாயை உயர்த்த நிர்வாக கமிட்டி திட்டமிட்டு அதற்கான பூர்வாங்க பணியில் இறங்கியுள்ளது.

முதற்கட்டமாக ரூபாய் 50லட்சம்.மதிப்பீட்டில் கடை கட்டுமான பணியை இன்றுகாலை சிறப்பு துஆவுடன் துவக்கி வைக்கபட்டது.

இந்த நிகழ்வில் முத்தவல்லி MS சிகாபுதீன்,செயலாளர் ஜெமீல் ஆலீம், ஷாகுல் ஹமீது, சம்சுல் இஸ்லாம் சங்க செயலாளர் ஹாஜா ஷரிஃப் உள்ளிட்ட அப்பகுதி ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.

You Might Be Interested In

You may also like

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter