அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டுக்கு உட்பட்ட நடுத்தெரு 3வது சந்தில் புதிய சாலை அமைப்பதற்க்காக கடந்த 10நாட்களுக்கு முன்னர் பழைய சாலைகளை JCB இயந்திரம் மூலம் பெயர்த்து எடுக்கப்பட்டது அப்போது சாலை பணிகளிக்கு இடையூறாக இருக்கும் வீடுகளின் படிக்கட்டுகளை இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது இதனால் வீட்டில் இருந்து ஏற இறங்க முடியாமல் வயோதிகர்கள், சிறார்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இடித்து பல நாட்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர், கழிவுநீர் கால்வாய்களிலும் உடைப்பு ஏற்பட்டு இருக்கிறது.
எனவே நகராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் 12வது வார்டுக்கு உட்பட்ட நடுதெரு 3வது சந்தில் தார் சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.