அதிரை எக்ஸ்பிரஸ்:- ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவைவிடவும் மிகக் குறைவான வாக்குகளை பாஜக பெற்றுள்ள நிலையில், குஜராத் தேர்தலில் சுயேச்சையாக களம்கண்டு வெற்றிபெற்ற சமூக ஆர்வலர் ஜிக்னேஷ் மேவானி பாஜகவை கிண்டல் செய்து கருத்து தெரிவித்துள்ளார்.
நோட்டாவைவிட மிகவும் குறைவாக பாஜக வெறும் 1,417 வாக்குகள் பெற்றிருந்தது சமூக ஊடகங்களில் தேசியளவில் பெரும் விவாதத்தை கிளப்பியது.
இந்நிலையில், குஜராத் தேர்தலில் வட்கம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற தலித் சமூக ஆர்வலரான ஜிக்னேஷ் மேவானி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக பெற்ற வாக்குகளை கிண்டல் செய்து ட்விட்டரில் ட்வீட் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அதில், உலகிலே மிகப்பெரிய மிஸ்டு கால் கட்சி, தமிழகத்தில் மட்டும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மிஸ்டு கால்களை பெற்ற கட்சி நோட்டா வாக்குகளை காட்டிலும் வெறும் குறைவான வாக்குகளை பெற்றிருக்கிறது. தமிழக தேர்தல் முடிவுகள் கொண்ட இந்த ஊத்தாப்பம் ஜீரணிக்கும் என்று நம்புகிறேன் என்று கிண்டல் செய்துள்ளார்.
ஜிக்னேஷின் இந்த ட்வீட் பரவலாக பரவி வருகிறது.