Friday, March 29, 2024

டீசல் இல்லாமல் பாதி வழியில் நின்ற அரசுப் பேருந்து; பரிதவித்த பயணிகள்!!!

Share post:

Date:

- Advertisement -

கோவையிலிருந்து ராமேஸ்வரம் வந்த அரசுப் பேருந்து டீசல் தீர்ந்து போனதால் பாதி வழியில் பயணிகள் இறக்கிவிடப்பட்டு மாற்றுப் பேருந்தில் பயணித்தனர்.
கோவையிலிருந்து நேற்று இரவு அரசுப் போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் கோட்டத்தைச் சேர்ந்த பேருந்து ஒன்று ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டது. இரவு நேரப் பேருந்து என்பதால் பேருந்தில் முழு அளவுப் பயணிகள் பயணித்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை இந்தப் பேருந்து ராமநாதபுரத்தில் பயணிகளை இறக்கிவிட்ட பின்னர் ராமேஸ்வரத்தை நோக்கிச் சென்றது.
ராமேஸ்வரத்திற்கு 30 கி.மீ முன்னதாக வந்துகொண்டிருந்த இந்தப் பேருந்து திடீரென நின்றுபோனது. இதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் ஓட்டுநரிடம் பேருந்து நின்றது குறித்து கேட்டதற்கு, ‘பஸ்ஸில் டீசல் காலியாகிவிட்டது. வேறு பேருந்தில் ஏற்றிவிடுகிறோம்” எனச் சொல்லி பயணிகளை இறங்கக் கூறியுள்ளனர். சுமைகளுடன் பேருந்தை விட்டு இறங்கிய பயணிகள் ”தொலைதூரத்திலிருந்து கிளம்பும் போதே டீசல் இருக்கா எனப் பார்த்துவிட்டு பேருந்தை எடுத்திருக்க வேண்டாமா” எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு பதிலளித்த பேருந்து ஓட்டுநரோ, ”குறிப்பிட்ட அளவு டீசலை கொண்டுதான் பேருந்தை இயக்குமாறு அதிகாரிகள் சொல்கிறார்கள். இதனால் குறைந்த அளவே டீசல் போட்டு விடுகிறார்கள். இடையில் பேருந்து நின்றால் நாங்கள் என்ன செய்ய முடியும். இதுபோல பல முறை டீசல் இல்லாமல் பாதியில் நின்றிருக்கிறோம்” என அலட்சியமாக பதில் கூறியுள்ளனர். இதையடுத்து வேறு வழியில்லாத பயணிகள் மாற்றுப் பேருந்தில் ஏறி ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...