Friday, April 17, 2026

பாராளுமன்றத்தை தென்னிந்தியாவிற்கு மாற்ற கோரும் அதிமுக எம்.பி.!

spot_imgspot_imgspot_imgspot_img

டெல்லி காற்று மாசுபாட்டுக்குத் தீர்வாக பாராளுமன்றக் கூட்டத்தை தென்னிந்தியாவில் நடத்த அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லி பாராளுமன்றத்தில் டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு தொடர்பாக குறுகிய நேரம் விவாதம் நடந்தது. இதில் கனிமொழி (தி.மு.க.), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு), ஏ.நவநீதகிருஷ்ணன் (அ.தி.மு.க.) ஆகியோர் பங்கேற்று பேசினார்கள்.

அப்போது பேசிய நவநீதகிருஷ்ணன், “டெல்லியில் வசிக்கும் அனைவரும் அச்சத்துடன் வாழ்கிறார்கள். மனிதர்கள் நீண்ட வாழ்க்கை வாழ முடியாத சூழல் நிலவி வருகிறது. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அனைவரும் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும். பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தால் பாராளுமன்ற கூட்டத்தை தென்னிந்தியாவில் மாற்றலாம் என்று நினைக்கிறேன். பாராளுமன்றத்தின் கூட்டத்தொடரை நாக்பூர், பெங்களூர் அல்லது சென்னையில் நடத்தலாம். இது தேசிய ஒருமைப்பாட்டுக்கும் வழிவகுக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் நல்ல மாற்றம் ஏற்பட்டு வருவதாக அதிமுக வேட்பாளர் CV....

பட்டுக்கோட்டை தொகுதியில் அரசியல் சூழல் நாளுக்கு நாள் பரபரப்பாக மாறி வருகிறது. இந்நிலையில், அதிமுக வேட்பாளர் CV சேகர் தனது கருத்தை வெளியிட்டு,...

அதிரை: தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டும் மேற்கு திமுக – கிழக்கில்...

அதிராம்பட்டினம் நகரில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக அமைப்பை நிர்வாக சீர்திருத்தங்களுக்காக கிழக்கு மற்றும் மேற்கு என இரு...

தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சகஜம்தான்: சாட்டை துரைமுருகன் பேச்சு குறித்து திமுக...

​அதிராம்பட்டினம்: தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு கருத்துக்களுக்கு அதிராம்பட்டினம் நகர திமுக நிர்வாகிகள் தெளிவான விளக்கம் அளித்துள்ளனர். ​சர்ச்சையின்...
spot_imgspot_imgspot_imgspot_img