Home »  வழக்கறிஞர்கள்அட்டையுடன் வக்காலத்து தாக்கல் செய்ய வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் அறிவிப்பு

 வழக்கறிஞர்கள்அட்டையுடன் வக்காலத்து தாக்கல் செய்ய வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் அறிவிப்பு

0 comment

வக்காலத்து தாக்கல் செய்யும் வழக்கறிஞர்கள் அடையாள அட்டையுடன் தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பில் வக்காலத்துக்களை சான்றளிக்கும் வழக்கறிஞர்களும் அடையாள அட்டை நகலை வழங்க வேண்டும் என்றும் அடையாள அட்டை இல்லாமல் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் ஏற்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை வரும் 2-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாவிட்டால் பார் கவுன்சிலில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்ற வழக்குகள் தொடர்பான மனுக்கள் தாக்கல் செய்யும் போது, வழக்கறிஞர் பதிவு எண்ணை குறிப்பிட்டு, மனுவின் அனைத்து பக்கங்களிலும் கையெழுத்திட வேண்டும் என்றும் மனுவில் வீட்டு முகவரி அல்லது அலுவலக முகவரியை குறிப்பிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter