போயஸ் கார்டனில் வருமானவரித்துறையினரால் சீல் வைக்கப்பட்ட 2 அறைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. போயஸ்i தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதன் முதற்கட்ட பணிகள் காலை 7.30 மணியிலிருந்து நடைபெற்று வந்தன. மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் காவல்துறை, மாநகராட்சி, வருவாய்த்துறை, வருமானவரித்துறை அதிகாரிகள் என 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தற்போது, பூட்டப்பட்டிருந்த ஜெயலிலதா மற்றும் பூங்குன்றன் அறைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்த அறைகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஏராளமான ஆவணங்கள் சிக்கியது என்று வருமான வரித்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும் தொடர்ந்து அங்கு ஆய்வுகள் மேற்கொள்ள பட்டுள்ளது, பாதுகாப்பிற்காக போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...
பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது.
சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...
திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு!
அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...





