Wednesday, February 19, 2025

4 மணி நேரம் சார்ஜ் செய்தால் 250 கிமீ ஓடும் – ஆந்திராவில் அறிமுகமாகும் பேட்டரி பஸ்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

ஆந்திராவில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் ஜனவரி முதல் புதிய பேட்டரி பஸ்கள் இயக்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

.வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் பயணிகளுக்கு புத்தாண்டு பரிசாக இந்த புதிய பேட்டரி பஸ்களை போக்குவரத்து கழகம் இயக்க உள்ளது. இந்த பஸ், 4 மணி நேரம் சார்ஜ் செய்தால் 250 கிலோ மீட்டர் வரை செல்லும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரூ.3 கோடி மதிப்புள்ள இந்த பேருந்துக்காக மத்திய அரசு ரூ.80 லட்சம் மானியம் வழங்கி உள்ளது. முதல் கட்டமாக இந்த பேட்டரி பஸ் கன்னவரம் விமான நிலையத்திலிருந்து வெலகம்புடிவரை இயக்கப்படும். மேலும், படிப்படியாக முக்கிய நகரங்களில் இயக்க அரசு முடிவு செய்துள்ளது. ஏசி வசதி கொண்ட சொகுசு பேருந்துகள் விலை ரூ.1 கோடியே 20 லட்சம் இருந்த நிலையில் தற்போது பேட்டரி பேருந்தை ரூ.3 கோடிக்கு வாங்கி பொதுமக்களுக்கு சிறந்த சேவை வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மக்களே உஷார் தமிழகத்தில் வேகமாக  பரவி வரும் ‘ஸ்கிரப் டைஃபஸ்’ பாக்டீரியா..!

தமிழகத்தில் 'ஸ்கிரப் டைஃபஸ்' எனப்படும் பாக்டீரியா தொற்று அதிகரித்து வருவதாக பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள்,...

மிரட்டும் கனமழை : 9 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாளையும்...

⭕⭕ BIG BREAKING: அதிரை கடற்கரையில் ரூ.2கோடி மதிப்பிலான போதை பொருள்...

அதிராம்பட்டினம் அடுத்த கீழத்தோட்டம் கடற்கரை பகுதியில் மர்ம பொருள் ஒன்று கிடப்பதாக போலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து, பட்டுக்கோட்டை கடற்கரை காவல் படையின்...
spot_imgspot_imgspot_imgspot_img