Monday, January 20, 2025

ஏரிப்புறக்கரை ஊராட்சியை கண்டித்து மமக ஆர்ப்பாட்டம்-அனுமதிகோரி காவல் நிலையத்தில் மனு!

spot_imgspot_imgspot_imgspot_img

ஏரிப்புரக்கரை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் மமக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் நகரச் செயலாளர் அகமது அஸ்லம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது : MSM நகர், KSA லைன் பகுதி ஏரிப்புறக்கரை ஊராட்சியை சேர்ந்ததாகும். அந்த குடியிருப்பு பகுதியில் குப்பை கூளங்களை சரிவர அகற்றுவது இல்லை. சாக்கடை கழிவுநீர், மழை நீர் அந்த குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து சுகாதார சீர்கேட்டை விளைவிக்கிறது. குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தோருக்கு மழைக்காலங்களில் டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்றுகளை ஏற்படுத்துகிறது. ஏரிப்புறக்கரை ஊராட்சி தலைவரிடமும், வார்டு உறுப்பினரிடமும் பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவே ஐயா அவர்கள் சமூகம் எதிர்புறக்கரை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து வருகின்ற 24.05.24 அன்று காலை 11 மணிக்கு கஸ்டம்ஸ் ரோடு, காலேஜ் முக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி தர வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மமகவின் 17ம் ஆண்டு தொடக்கம் – அதிரை நகரம் முழுவதும் கொடியேற்றி...

மனிதநேய மக்கள் கட்சியின் 17ம் ஆண்டு தொடக்கத்தை அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில்...

மரண அறிவிப்பு: அப்துல் ஹமீது அவர்கள்.!

அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முகம்மது சேக்காதி அவர்களின் மகனும், மர்ஹூம் குஞ்சாளி முகம்மது சேக்காதி அவர்களின் மருமகனும், மர்ஹூம் V.K.M. சாகுல் ஹமீது, அவர்களின்...

டி.ஆர்.பாலுவுடன் அதிரை அஸ்லம் சந்திப்பு!

அதிரை மேற்கு நகர திமுக செயலாளரும் முன்னாள் சேர்மனுமான அஸ்லம், தனது கட்சியின் தலைமை நிர்வாகிகளுடன் நல்லுறவை பேணி வருகிறார். அதன் ஒருபகுதியாக...
spot_imgspot_imgspot_imgspot_img