Sunday, July 20, 2025

அதிரை மமகவின் போராட்ட அறிவிப்பால், வழிக்கு வந்த அதிகாரிகள் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் ஏரிபுறக்கரை பஞ்சாயதிற்கு உட்பட்ட MSM நகர் பகுதியில் சமீபத்தில் பெய்த கன மழையினால், தனியார் ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் நீர் தங்கியது, முட்புதர்கள் நிரம்பிய அந்த காலி மனையின் உரிமையாளர் கவனத்திற்கு அப்பகுதி மக்கள் கொண்டு சென்றும் பலனில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதிராம்பட்டினம் நகர மமகவின் கவனத்திற்கு அப்பகுதி மக்கள் கொண்டு சென்றனர்,இதன் தொடர்ச்சியாக போராட்ட அறிவிப்பு ஒன்றை நகர மமக அறிவித்து, போராட்டத்திற்கு தயாரானது.

இந்த போராட்டம் குறித்த செய்தியை அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாக வெளியிட்டது, இதனை அடுத்து பட்டுக்கோட்டை BDO மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர் அப்போது முதற்கட்டமாக தேங்கியிருக்கும் நீரை அகற்றி தருவதாகவும், தேர்தல் நடத்தை விதிகள் முடிந்த பின்னர் நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தர உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

மேலும் தங்களின் போராட்ட அறிவிப்பை வாபஸ் வாங்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து மமக நகர பொறுப்பாளர்கள், கூறுகையில், அதிகாரிகள் மேற்கூறியுள்ள இடத்திற்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தருவதாக ஒப்புகொண்டதன் அடிப்படையில் தற்காலிகமாக மமகவின் போராட்ட அறிவிப்பு தற்காலிகமாக ஒத்தி வைக்கபடுவதாக தெரிவிக்கின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

நடந்து முடிந்த முதல் நாள் ஆட்டத்தில் மொத்தம் ஐந்து ஆட்டங்கள் நடைபெற்றன இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC மற்றும் POTHAKUDI அணியினர்...

வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 14ஆம் ஆண்டு & மூன்றாம் ஆண்டு...

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வருகின்ற ஜூலை 11,12,13-2025 ஆகிய தினகளில் இரவு நேர  கால்பந்தாட்ட போட்டி வெஸ்டர்ன் கால்பந்து கழக சார்பாக நடைபெற உள்ளது. இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img