அதிராம்பட்டினத்தில் வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 13ம் ஆண்டு மாநில அளவிலான எழுவர் கால்பந்து தொடர் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.
அதிராம்பட்டினம் மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கிய இத்தொடரில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் தம்பி மெமோரியல் காரைக்குடி அணியினரும் யாதவா காலேஜ் மதுரை அணியினரும் மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய தம்பி மெமோரியல் காரைக்குடி அணி, 3-1 என்ற கோல் கணக்கில் யாதவா காலேஜ் மதுரை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
நாளைய(21/07/2024) தினம் விளையாட வேண்டிய அணிகள் :
முதல் ஆட்டம் :
MFC மதுக்கூர் vs AFFA அதிராம்பட்டினம்
இரண்டாவது ஆட்டம் :
மன்சூர் FC திட்டச்சேரி vs சவுத் பாய்ஸ் காரைக்குடி
இடம் : பெரிய மருதநாயகம் மைதானம், மேலத்தெரு, அதிராம்பட்டினம்



