அதிராம்பட்டினத்தில் வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 13ம் ஆண்டு மாநில அளவிலான எழுவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த 18/07/24 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதிராம்பட்டினம் மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கிய இத்தொடரில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மன்சூர் FC திட்டச்சேரி அணியினரும் சவுத் பாய்ஸ் காரைக்குடி அணியினரும் மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமமாக விளையாடி முடித்தனர். பின்னர் நடைபெற்ற டைபிரேக்கரில் மன்சூர் FC திட்டச்சேரி அணி, சவுத் பாய்ஸ் காரைக்குடி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
நாளைய(24/07/2024) தினம் விளையாட வேண்டிய அணிகள் :
யுனைடெட் FC நாகூர் vs ACME மதுரை
இடம் : பெரிய மருதநாயகம் மைதானம், மேலத்தெரு, அதிராம்பட்டினம்

