அதிராம்பட்டினத்தில் வெஸ்டர்ன் கால்பந்து கழகம் நடத்தும் 13ம் ஆண்டு மாநில அளவிலான எழுவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த 18/07/24 அன்று தொடங்கியது.
அதிராம்பட்டினம் மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கிய இத்தொடரில் நேற்று சனிக்கிழமை இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதலாவதாக நடைபெற்ற ஆட்டத்தில் TCFC கும்பகோணம் அணியினரும் MMFA பொதக்குடி அணியினரும் மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் துவக்கம் முதலே கும்பகோணம் TCFC அணி ஆதிக்கம் செலுத்தியது. இறுதி ஆட்டநேர முடிவில் TCFC கும்பகோணம் அணி, 3-1 என்ற கோல் கணக்கில் MMFA பொதக்குடி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் அத்லெடிக் புல்ஸ் தஞ்சாவூர் அணியினரும் ஜூபிலி FC கேரளம் அணியினரும் மோதினர். இதில் ஆட்டநேர முடிவில் இரண்டு அணிகளும் 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் விளையாடி முடித்தனர். இதையடுத்து இரு அணிகளுக்கும் வேறு ஒரு நாள் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இன்றைய(28/07/2024) தினம் விளையாட வேண்டிய அணிகள் :
AFFA அதிராம்பட்டினம் vs தம்பி மெமோரியல் காரைக்குடி
இடம் : பெரிய மருதநாயகம் மைதானம், மேலத்தெரு, அதிராம்பட்டினம்








