புதுதில்லி: உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் புதிய 500 ரூபாய் அச்சடிக்க ரூ.4,968 கோடி செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு புத்திசாலித்தனமற்ற முடிவு; இந்த நடவடிக்கையால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதுதான் மிச்சம் என்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு கண்மூடித்தனமான, புத்திசாலித்தனமற்ற முடிவாகும் என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியது.
இந்நிலையில், புதிய 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க செலவிடப்பட்ட தொகை குறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் 1,695.7 கோடி புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டது. இதற்காக ரூ.4,968.84 கோடி செலவிடப்பட்டது. அதேபோன்று 365.4 கோடி புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க ரூ.1,293.6 கோடி செலவிடப்பட்டது. அதேபோன்று 178 கோடி 200 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க ரூ.522.83 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
மேலும் உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் ரூ.7,961 கோடி கணக்கில் காட்டாத பணத்தை வருமான வரித்துறையினர் கண்டிபிடித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More like this
வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள நீதிமன்றங்கள் எந்த உத்தரவும்...
வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991க்கு எதிராக தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று...
ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செல்ல விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!
இந்தியாவில் இருந்து எதிர்வரும் 2025ஆம் ஆண்டு இந்தியன் ஹஜ் கமிட்டி வழியாக ஹஜ் பயணம் செல்வதற்கான விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதற்கு...
மீண்டும் சென்னை – ஜித்தா விமானப் பயண சேவை தொடங்கியது சவுதியா...
கடந்த மூன்று ஆண்டுகளாக சென்னையிலிருந்து ஜித்தா பயணிக்க நேரடி விமான சேவை இல்லாமல், குறிப்பாக புனித உம்ரா செல்வோருக்கு மிகவும் சிரமமாக இருந்து...